பாகிஸ்தானில் தலிபான் அலுவலகம்: அனுமதி கேட்டு மனு
அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாகிஸ்தானில் தலிபான்கள் அலுவலகம் துவங்க அனுமதி கோரி அந்த நாட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் காஸிஃப் மஹ்முது சுலேமானி செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
‘பாகிஸ்தானில் தலிபான்கள் அலுவலகம் துவங்க அனுமதி அளிப்பது, பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற உதவும்.
மேலும், தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதால் பாகிஸ்தான் மீது எந்த வித பொருளாதாரத் தடையும் விதிக்க இயலாது என்று ஜக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
எனவே தலிபான்கள் அலுவலகத்திற்கு அனுமதி அளிக்க அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கத்தாரில் அமைந்துள்ள தலிபான்களின் அலுவலகத்தை சுட்டிக்காட்டிய தெஹ்ரிக்-இ-இன்ஸாஃப் கட்சித் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பெஷாவரில் தலிபான்கள் அலுவலகம் திறக்க பாகிஸ்தான் அரசு அனுமதிக்கலாம் என்று கருத்து கூறியுள்ளார்.
Average Rating