மட்டக்களப்பில் மரக்குற்றி விழுந்து, ஒருவர் மரணம்!!
Read Time:1 Minute, 27 Second
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை மணல்பிட்டிய வீதியில் டிபர் வாகனம் ஒன்றில் இருந்த மரக் குற்றிகள், சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவரின் தலையில் தவறி விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்
மணல்பிட்டி பகுதியில் இருந்து கொக்கட்டிசோலை நோக்கி பயணித்த டிபர் வாகனம் ஒன்றில் இருந்த மரக்குற்றிகளே, அதற்கு எதிர்த்திசையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த நபரின் தலையில் விழுந்துள்ளன.
இதனால் படுகாயமடைந்த அவர் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மாவடி மும்மார் பகுதியைச் சேர்ந்த 33 வயதான காக்தமுத்து ரவி என்பவரே பலியாகியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய டிபர் வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இன்று களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Average Rating