14 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது
கலட்டுவாவ, கரந்தன, பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கர்ப்பிணியாக்கிய இளைஞர்கள் இருவரை அவிசாவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கரந்தன, தம்முல்ல பிரதேசத்தில் வீதி நிர்மாணப் பணிகளுக்கு கொண்டுவரப்பட்ட புல்டோசர் ஒன்றின் உதவியாளர் முதன் முதலில் இந்த யுவதியை துஷ்பிரயேhகத்துக்குட்படுத்தியுள்ளார்.
இந்த நபர் யுவதியின் தந்தையுடன் அவரது வீட்டுக்கு வந்து மதுவருந்துவது வழக்கம். இவ்வாறு மதுவருந்திய நாளொன்றில் இரவு யுவதியின் வீட்டுக்குப் பின்னால் திறந்த வெளியில் இந்த யுவதி அந்த நபரால் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த காலப்பகுதிக்குள் யுவதியின் வீட்டுக்கு அயலிலுள்ள இளைஞரொருவரும் யுவதியை காதலிக்கும் போர்வையில் பலமுறை இந்த யுவதியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இளைஞர்கள் இருவரும் 20, 22 வயதுடையவர்களாவர். இரு இளைஞர்களையும் அவிசாவளை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததை அடுத்து அவிசாவளை நீதிவான் நீதிமன்றம் இரு இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்கும்படியும் யுவதியை வைத்திய பரிசோதனைக்குட்படுத்தும்படியும் உத்தரவிட்டுள்ளது.
Average Rating