இசைக்கச்சேரியில் கல்வீச்சு: இசைக்கருவிகளுக்கு சேதம்!
Read Time:1 Minute, 2 Second
களுத்துறை, மத்துகம, பெலவத்தை மிரஸ்வத்தையில் நடத்தப்பட்ட இசைக்கச்சேரியின் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலில் இசைக்கருவிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இசைக்கச்சேரி நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கச்சேரி காலதாமதமாகி ஆரம்பமானதுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்தே ரசிகர்கள் கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இசைக்கச்சேரிக்கு சென்றவர்களிடம் கட்டணம் அறவிடப்பட்டதாகவும் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating