மகள்­மாரை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த தந்­தை

Read Time:2 Minute, 8 Second

rape-016மகள்­மாரை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த தந்­தைக்கு 120 வரு­ட­கால கடூ­ழியச் சிறை!
தமது 16 மற்றும் 13 வயது மகள்­மாரை அவ்­வப்­போது பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­தது தொடர்­பாக ஆறு குற்­றச்­சாட்­டு­களின் கீழ் அநு­ரா­த­புரம் விசேட நீதி­மன்­றத்தில் வழக்கு தொட­ரப்­பட்ட தந்­தை­யொ­ரு­வ­ருக்கு 120 வருட கடூ­ழியச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டுள்ளது.

அநு­ரா­த­புரம் விசேட உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் கேமா சுவர்­ணா­தி­பதி இத் தண்­ட­னையை விதித்­த­துடன் பாதிக்­கப்­பட்ட இரு யுவ­தி­க­ளுக்கும் தலா பத்து இலட்ச ரூபா நஷ்­டஈ­டாக வழங்­கும்­ப­டியும் இத் தொகையை செலுத்­தா­விட்டால் மேலும் நான்கு வரு­டங்கள் கடூ­ழியச் சிறைத் தண்­டனை அனு­ப­விக்க வேண்­டு­மெ­னவும் உத்­த­ர­விட்டார்.

ஹொர­வ­பொத்­தான கப்­பு­கொல்­லேவ என்ற இடத்தைச் சேர்ந்த கே. அம­ர­சிரி குண­வர்­தன என்ற 40 வய­தான நப­ருக்கே இத்­தண்­டனை வழங்­கப்­பட்­டது.

2011 ஆம் ஆண்டு பெப்­ர­வ­ரியில் 21 ஆம் திகதி தொடர்ந்தும் 2012 ஆம் ஆண்டு பெப்­ர­வரி 20 ஆம் திக­தி­ வ­ரை­யான காலப் பகு­தியில் தமது 16 வயது புதல்­வியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­ய­தா­கவும் 2011 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முதலாம் திகதி முதல் 2012 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை­யி­லான காலப் பகு­தியில் தமது 13 வயது புதல்வியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகவும் இவர் மீது சட்டமா அதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முழு நிர்வாணமாக கலந்து கொண்ட யுவதிகள்..
Next post பாலத்­தி­லி­ருந்து குதித்த அண்­ணனும் தம்­பியும் பலி!