பதின்மர் பருவ சிறுமியை ஒரு மாத காலம் வல்லுறவுக்குள்ளாக்கிய சவூதி சிப்பாய்கள் மூவர் கைது
சவூதி அரேபியாவில் பதின்மர் பருவ சிறுமியை ஒருமாதகாலம் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் சவூதி அரேபிய படைச் சிப்பாய்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவூதியின் வடபிராந்திய நகரமான அராரில் இச்சம்பவம் இடம்பெற்றதாக சவூதி அரேபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
இச்சிப்பாய்கள் மேற்படி மாணவியின் அந்தரங்கப் புகைப்படமொன்றை பெற்றுக்கொண்டபின் தம்முடன் பாலியல் உறவுக்கு உடன்படுமாறும் இல்லையெனில் அப்படத்தை பகிரங்கப்படுத்தப்போவதாகவும் மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, அச்சிறுமியின் பெற்றோரை நித்திரைக் குளிசைகளை உட்கொள்ளச் செய்யுமாறும் பெற்றோர் உறக்கத்தில் ஆழ்ந்தபின் இரவில் விடுதியொன்றுக்கு வருமாறும் அச்சிறுமியை மேற்படி சிப்பாய்கள் நிர்ப்பந்தித்தனராம்.
சிப்பாய்கள் கூறிய விடுதிக்குச்சென்று சிறுமியை சிப்பாய்கள் மூவரும் வல்லுறவுக்குட்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். சுமார் ஒரு மாத காலமாக ஒவ்வொரு இரவும் இந்த வன்முறை இடம்பெற்றுள்ளது.
பின்னர் இத்தொல்லை தாங்க முடியாத சிறுமி சவூதி அரேபியாவின் ஒழுக்க விழுமியங்களுக்கான பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார். அதன்பின் மேற்படி விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார், சிப்பாய்கள் மூவரையும் கைது செய்துள்ளதாக மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது.
Average Rating