யாழில் குடும்ப உறுப்பினர்கள் அறுவர் மீது வாள்வெட்டு!
Read Time:1 Minute, 7 Second
யாழ். உடுவில், தெற்கு மானிப்பாய் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஆறு பேர் மீது இனந்தெரியாத நபர்களினால் நேற்று சனிக்கிழமை மாலை வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது.
இதனால் படுகாயமடைந்த ஆறு பேரும் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வீட்டுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலரே வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் எஸ்.சிவஞானமூர்த்தி (57), சி.தவனேஸ்வரி (45), சி.கிருஸ்ணகுமார் (23), திலக்ஷன் (15) மற்றும் என்.அன்னம்மா (74) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating