தங்க பாதணிகளுடன், புறப்பட முயன்ற இருவர் கைது!!
Read Time:1 Minute, 14 Second
11 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான நான்கு தங்க தகடுகளை பாதணிகளுக்குள் மறைத்து கடத்த முயன்ற இந்தியப் பிரஜைகள் இருவரை சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சென்னையை நோக்கி இன்று திங்கட்கிழமை புறப்படமுயன்ற போதே இவ்விருவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 270 கிராம் என்றும் அந்த தங்க தகடுகள் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி பாதணிக்குள் ஒட்டப்பட்டிருந்ததாகவுமு; அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவருரில் ஒருவர் இலங்கைக்கு நேற்றைய தினமே வருகைதந்துள்ளார். மற்றையவர் அடிக்கொரு தடவை வந்துசெல்கின்றவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating