சிறுவர் துஷ்பிரயோகம்: பிக்குவிக்கு விளக்கமறியல்
Read Time:1 Minute, 24 Second
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வட மாகாண உப-சங்கநாயக்க வண.அட்டமகஸ்கட கல்யாண திஸ்ஸ தேரரை எதிர்வரும் 19ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரான தேரரை பொலிஸார் வவுனியா நீதவான் வீ.ராமகமலன் முன்னிலையில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரான கல்யாண திஸ்ஸ தேரரினால் அட்டமகஸ்கட பகுதியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றும் நடத்தப்பட்டது. அந்த இல்லத்தில் தமிழ் மற்றும் சிங்கள சிறுவர்கள் 50 பேர் இருந்துள்ளனர்.
அந்த இல்லத்திலிருந்த சிறுவர்களில் அறுவரையே குறித்த பிக்கு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததுடன் சிறுவர்கள் அறுவரும் நீதிமன்றத்தில் இன்று சாட்சியமளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Average Rating