12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் எட்டு வயது சிறுவன் உட்பட மூவர் கைது!!
12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் சிறுமியின் உடன் பிறந்த சகோதரன் மற்றும் சிறுமி கல்வி பயிலும் பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்வி பயிலும் உறவு முறை சகோதரனொருவனையும், 26 வயதான திருமணமான நபரொருவரையும் கெக்கிராவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கெக்கிராவ, நிக்கினியாவ, சமகிகம என்ற இடத்தில் வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் பாதுகாப்புக்காக இருந்த உடன் பிறந்த சகோதரனும் உறவு முறை சகோதரனும் இச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. வைத்திய சோதனைக்காக சிறுமி கெக்கிராவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மூவரில் இருவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படியும் உறவு முறைச் சகோதரனை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கும்படியும் கெக்கிராவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Average Rating