விபசார விடுதி உரிமையாளர் உட்பட இரு பெண்களுக்கும் விளக்கமறியல்
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள விபசார விடுதியொன்றில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட மூன்று பெண்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கல்லடியிலுள்ள விடுதியொன்றில் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு பெண்கள் மற்றும் விடுதி உரிமையாளர் உட்பட மூன்று பெண்களை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது இம்மூவரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating