அக்கரைப்பற்றில் வீதியில் பிரசவித்த பெண்
Read Time:57 Second
வீதியில் பிரசவம் இடம்பெற்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அக்கரைப்பற்றில் நேற்றுமுன்தினம் பிற்பகல் 2 மணியளவில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.
குறிப்பிட்ட பெண் வீதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென பிரசவ வலியினால் வீதியோரத்தில் பிரசவித்துள்ளார்.
பின் அங்கிருந்தவர்களின் உதவியுடன் பிரசவித்த குழந்தையும் தாயும் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண் மிகவும் வறுமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating