வாவிக்கருகே காதல் ஜோடி கலாட்டா; காதலன் மீது கல்லெறிந்த இளைஞர்கள்

Read Time:2 Minute, 15 Second

love-bad-01பொர­லஸ்­க­முவ வாவிக்­க­ருகே இளம் காதல் ஜோடி­யொன்று வாய்த்­தர்க்­கத்தில் ஈடு­பட்­டி­ருந்த போது அங்கு வந்த மூவர் காத­லனை கற்­களால் தாக்­கி­யதால் தலையில் பலத்த காயங்­க­ளுடன் காதலன் கொழும்பு வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக மஹ­ர­கம பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

கற்­களை எறிந்த மூன்று நபர்­க­ளையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். வாவிக்­க­ருகே நேற்று முன்­தினம் மாலை உரை­யாடிக் கொண்­டி­ருந்த காத­லர்­க­ளுக்­கி­டையே வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டதை அடுத்து இளைஞன், யுவ­தியை கன்­னத்தில் அறைந்­துள்ளான்.

இதைப் பார்த்த வாவிக்­க­ரு­கே­யி­ருந்த சந்­தேகநபர்கள் மூவரும் இளை­ஞனைத் தாக்­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இந்த மூவரின் தாக்­கு­தலைத் தாங்க முடி­யாத காதலன் தன்னை தாக்­க ­வேண்­டா­மென காலில் விழுந்து கெஞ்­சியும் சந்­தேகநபர்கள் இளைஞன் மீது மிரு­கத்­த­ன­மாக காத­லியின் எதிரில் தாக்­குதல் நடத்­தி­ய­தாக காதலி பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்குமூலத்தில் தெரி­வித்­துள்ளார் என்று பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

இவர்­க­ளிடமிருந்து தப்­பு­வ­தற்­காக இந்த இளைஞன் மஹ­ர­கம பக்­க­மாக ஓடிய போது சைக்­கிளில் துரத்தி வந்த இந்த நபர்கள் கல்லை இளை­ஞனின் தலையை நோக்கி எறிந்­துள்­ளனர்.

சந்­தேகநபர்கள் மொன­ரா­கல, மஹி­யங்­கன மற்றும் காலி பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர். மஹரகம பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அநாதரவாக கிடந்த தங்க நகைகளை விற்பதற்கு சென்ற காதலர்கள் கைது!!
Next post விபச்சார வழக்கில் கையும், களவுமாக சிக்கிய ஐஸ் நடிகை!