பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் பங்கேற்க வேண்டும் -மன்னார் ஆயர்

Read Time:1 Minute, 40 Second

mann.ayar-basilபொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் கலந்து கொள்ள வேண்டும் என்று மன்னார் மஆயர் இராயப்பு ஜோசப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவ்வாறு இலங்கை வரும் போது இந்தியப் பிரதம மந்திரி மன்னார் உட்பட வடமாகாணத்திற்கு வருகை தர தவறக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவே இந்த யுத்தத்தை ஊக்குவித்திருக்கின்ற காரணத்தினால் அதனால் ஏற்பட்ட விளைவுகளை இந்தியப் பிரதம மந்திரி இங்கு வந்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் வடமாகாணத்திற்கு வந்து அங்குள்ள தமிழர்களைச் சந்தித்து உரையாடினால் யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள பக்க விளைவுகளை அவரால் நன்கு தெரிந்து கொள்ளமுடியும் என்றும் அதிவணக்கத்துக்குரிய ஆயர் இராயப்பு ஜோசப் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா தமிழர்களின் தாயின் ஸ்தானத்தில் இருப்பதனால் இந்தியா விழித்தொழுந்து தமிழ் மக்கள் படும் வேதனையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுக்குடியிருப்பு கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு
Next post அக்­க­ரைப்­பற்றில் வீதியில் பிரசவித்த பெண்