களுகங்கையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
Read Time:42 Second
இரத்தினபுரி, வலக்காபுர பாலத்திற்கு அருகில் களு கங்கையில் மிதந்து கொண்டிருந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 30 தொடக்கம் 40 வயதிற்கு உட்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரது சடலம் இதுவரையில் இனங்காணப்படவில்லை.
சடலத்தில் காயங்கள் எதுவும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Average Rating