உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண கைதிகள் நூதன போராட்டம்
Read Time:1 Minute, 17 Second
பல்கேரியாவை சேர்ந்த 2 கைதிகள் கால்பந்து ரசிகர்கள். ஆயுள் தண்டனை கைதிகளான அந்த 2 பேரும் அடைக்கப்பட்டு இருக்கும் சிறைச்சாலையில் டி.வி. பெட்டி கிடையாது. இதனால் உலக கோப்பை கால்பந்து போட்டியை அவர்களால் பார்க்க முடியவில்லை. ஆதலால் டி.வி. பெட்டி ஒன்று வைக்க வேண்டும் என்றும், டி.வி.பார்க்க அனுமதி தர வேண்டும் என்றும் கோரி 2 பேரும் பட்டினி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்காக வாயையும் தைத்துக்கொண்டு விட்டனர். அது மட்டுமல்ல டி.வி. பார்க்கும் போது தங்களுக்கு டீ, காபி, சிகரெட் ஆகியவற்றை கேட்கும் போது எல்லாம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த கைதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். வாயை அவர்கள் முழுமையாக தைத்துக் கொள்ளவில்லை. சிகரெட் பிடிப்பதற்கு மட்டும் கொஞ்சம் இடம் விட்டு உள்ளனர்.