மருமகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாமனார் பொலிஸாரால் கைது

Read Time:2 Minute, 51 Second

rape-001தனது மகனின் மனை­வி­யான 17 வய­தான மரு­ம­களை தனது மகளின் துணைக்கு என ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய மாமா ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக ஆன­மடுவ பொலிஸார் தெரி­வித்­துள்ளனர்.

ஆண்­டி­கம புத்­தி­கம எனும் பிர­தே­சத்தைச் சேர்ந்த திரு­ம­ண­மான பெண்ணே இவ்­வாறு வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன், ஆன­மடுவ கரா­யக்­குளம் பொலிஸ் கிரா­மத்தில் வசிக்கும் 46 வய­தான ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார்.

சம்­பவதினம் சந்­தேகநபர் தனது மரு­ம­களின் வீட்­டுக்குச் சென்று தனது வீட்டில் தனது மகள் தனி­மையில் இருப்­ப­தா­கவும், அவ­ளுக்கு துணை­யாக இருக்க வரு­மாறும் கூறி தனது மகனின் மனை­வியை அவ­ளது வீட்­டி­லி­ருந்து தனது வீட்­டுக்கு அழைத்து வந்­துள்ளார். இவ்­வாறு தனது மரு­ம­களை ஏமாற்றி அழைத்து வந்­ததன் பின்­னரே தனது வீட்டில் வைத்து அவரைப் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

தனது தந்­தை­யுடன் சென்ற தனது மனை­வியைத் தேடிச் சென்ற குறித்த யுவ­தியின் கண­வ­ரிடம் அவ்­யு­வதி தன் மீது தனது மாமனார் மேற்­கொண்ட குற்­றச்­செயல் தொடர்பில் முறை­யிட்­டுள்ளார்.

இதன் பின்னர் பாதிக்­கப்­பட்ட யுவ­தியுடன் அவ­ளது கண­வரும் ஆன­மடுவ பொலிஸ் நிலை­யத்தில் இச்­சம்­பவம் தொடர்பில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். இந்த முறைப்பாட்­டை­ய­டுத்து சந்­தேகநப­ரான பாதிக்­கப்பட்ட பெண்ணின் மாமனார் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

தன்னை வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய சமயம் தனது மாமனார் மது­போ­தையில் இருந்­த­தா­கவும் அப்பெண் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பெண் வைத்­திய பரிசோதனைக்காக ஆனமடு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனமடு பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூட்டமைப்பினரும் ஆதரவாளர்களும் முரண்படுவது நல்லதல்ல- “துண்டுப்பிரசுரம்”
Next post 19 வயது தொலைக்காட்சி நட்சத்திரத்துடனான 53 வயது நடிகரின் திருமண வாழ்க்கை முறிந்தது..