ஆட்டோவுக்குள் சிறுமி துஷ்பிரயோகம்: சாரதிக்கு விளக்கமறியல் உத்தரவு
முச்சக்கர வண்டிக்குள் வைத்து 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய ஆட்டோ சாரதியை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரஞ்ஜீவ விமலசேன உத்தரவிட்டார்.
சந்தேக நபரான ஆட்டோ சாரதி வலப்பனே பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
பெற்றோரை இழந்த இச்சிறுமி தனது தாத்தா, பாட்டியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த சிறுமிக்கும் அவரது பாட்டிக்கும் பயண வசதிகளை செய்து கொடுப்பதற்காக இந்த ஆட்டோ சாரதி இவர்களுடன் நட்பு கொண்டுள்ளார்.
இதன் பின்னர் சிறுமியை ஏமாற்றி அத்திடிய பிரதேசத்திலுள்ள ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்று அவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார் என்று பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
சிறுமியை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர் செய்து அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும் நீதிவான் உத்தர விட்டுள்ளார்.
Average Rating