ஆட்டோவுக்குள் சிறுமி துஷ்பிரயோகம்: சாரதிக்கு விளக்கமறியல் உத்தரவு

Read Time:1 Minute, 36 Second

rape-010முச்­சக்­கர வண்­டிக்குள் வைத்து 15 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய ஆட்டோ சார­தியை எதிர்­வரும் 14 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி கல்­கிஸ்ஸ நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ரஞ்­ஜீவ விம­ல­சேன உத்­த­ர­விட்டார்.

சந்­தேக நப­ரான ஆட்டோ சாரதி வலப்­பனே பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ராவார்.

பெற்­றோரை இழந்த இச்­சி­றுமி தனது தாத்தா, பாட்­டி­யுடன் வாழ்ந்து வந்­துள்ளார்.

இந்த சிறு­மிக்கும் அவ­ரது பாட்­டிக்கும் பயண வச­தி­களை செய்து கொடுப்­ப­தற்­காக இந்த ஆட்டோ சாரதி இவர்­க­ளுடன் நட்பு கொண்­டுள்ளார்.

இதன் பின்னர் சிறு­மியை ஏமாற்றி அத்­தி­டிய பிர­தே­சத்­தி­லுள்ள ஓர் இடத்­துக்கு அழைத்துச் சென்று அவரை துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­யுள்ளார் என்று பொலிஸார் நீதி­மன்றில் தெரி­வித்­தனர்.

சிறு­மியை சட்ட வைத்­திய அதி­கா­ரியிடம் ஆஜர் செய்து அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படியும் நீதிவான் உத்தர விட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 19 வயது தொலைக்காட்சி நட்சத்திரத்துடனான 53 வயது நடிகரின் திருமண வாழ்க்கை முறிந்தது..
Next post மனைவியை இரும்புக் கம்பியினால் தாக்கிய கணவன், தற்கொலை