“மண­மகள் தேவை” விளம்­பர மோசடி: கேகாலை நப­ரிடம் சிக்­கிய ஆசி­ரியை!

Read Time:3 Minute, 17 Second

WEDDING.001மண­மகள் தேவை­யென்று பத்­தி­ரிகை ஒன்றில் விளம்­பரம் செய்து ஆசி­ரியை ஒரு­வ­ரி­ட­மி­ருந்து மூன்று இலட்­சத்து 50 ஆயிரம் ரூபாவை மோசடி செய்­த­தாக கூறப்­படும் நபரை பிபிலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கேகா­லையைச் சேர்ந்த நபர் ஒரு­வரே பிபிலை பகு­தியைச் சேர்ந்த ஒரு ஆசி­ரி­யை­யிடம் பண மோசடி செய்து இவ்­வாறு மாட்டிக் கொண்­டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது,

ஐம்­பத்­தொரு வய­து­டைய மேற்­படி நபர் தான் திரு­மணம் செய்ய எண்­ணி­யி­ருப்­ப­தனால் தனக்கு மண­ம­க­ளொ­ருவர் தேவை­யென்றும் விரும்­பு­ப­வர்கள் தன்­னுடன் தொலை­பேசி ஊடாக தொடர்பு கொள்­ளு­மாறும் சிங்­கள மொழி மூல­மான பத்­தி­ரி­கை­யொன்றில் விளம்­பரம் செய்­தி­ருந்தார்.

இதற்­கி­ணங்க பிபிலைப் பகு­தியின் அரச பாட­சா­லை­யொன்றின் ஆசி­ரி­யை­யொ­ருவர் விளம்­ப­ரத்தில் குறிப்­பிட்ட தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொண்டு பேசிய போது திரு­மணம் செய்து கொள்ள சம்­ம­தித்த நபர் ஆசி­ரி­யையை நேரில் சந்­தித்து மனம் விட்டு கதைக்க வேண்­டு­மென்ற விருப்­பத்தை வெளி­யிட்­டுள்ளார். ஆசி­ரி­யையும் அவ்­வி­ருப்­பத்­தை­யேற்று சந்­தித்­துள்ளார்.

இந்த சந்­திப்­புகள் தொடர்ந்தும் இடம்­பெற்று வந்­துள்­ளன. இவ்­வே­ளை­யி­லேயே அந்­நபர் அவ் ஆசி­ரி­யை­யிடம் தனக்கு வாக­ன­மொன்று எடுக்க வேண்­டு­மென்றும் அதற்கு மூன்­றரை இலட்சம் ரூபா பணம் பற்­றாக்­கு­றை­யாக இருப்­ப­தா­கவும் கூறி­ய­தை­ய­டுத்து அவ் ஆசி­ரியை இரு தட­வை­களில் மூன்­றரை இலட்சம் ரூபா பணத்தை அந்­ந­ப­ரிடம் வழங்­கி­யுள்ளார்.

பணம் வழங்­கப்­பட்ட தினம் முதல் அந்­நபர் தன்­னுடன் கதைப்­பதை நிறுத்திக் கொண்டு தலை மறை­வா­கி­யுள்­ள­தாக பிபிலைப் பொலி­ஸா­ரிடம் அவ் ஆசி­ரியை முறைப்­பாடு செய்­ததை அடுத்து பொலிஸார் மேற்­கொண்ட துரித நட­வ­டிக்­கை­யினை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்­நபர் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட போது பெண்­களை திரு­மணம் செய்து கொள்வதாகக் கூறி பல பெண்களிடம் பண மோசடி செய்திருப்பதும் இம் மோசடிகள் குறித்து இந்நபருக்கெதிராக கேகா லை நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியை இரும்புக் கம்பியினால் தாக்கிய கணவன், தற்கொலை
Next post அமெரிக்காவில் 3 இசைக் கலைஞர்களை சுட்டு கொன்று தற்கொலை செய்த நபர்