2500 கோழிகளும் காவலாளியும் கடத்தல்
Read Time:1 Minute, 25 Second
கோழிப் பண்ணை ஒன்றில் இருந்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான 2500 கோழிகளை கொள்ளையிட்டுச் சென்றதாகக் கூறப்படும் இரு சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் – மானுவன்கம பகுதியில் உள்ள தனது கோழிப் பண்ணைக்கு இரண்டு தடவைகள் வாகனத்தில் வந்தவர்கள் கோழிகளை பலவந்தமாக எடுத்துச் சென்றதாக வென்னப்புவ – போலவத்தை பகுதியைச் சேர்ந்த ஹெட்டியாராச்சிகே ரவி இந்திரஜித் ஸ்வரியஸ் பெரேரா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கோழி பண்ணை காவலாளியும் கடத்தப்பட்டு வீதியில் விட்டுச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையிட வந்தவர்கள் காவலாளியால் அடையாம் காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating