காதலனைக் கட்டி வைத்து காதலி மீது மாணவர்கள் உட்பட ஐவர் பாலியல் வல்லுறவு

Read Time:3 Minute, 26 Second

2929Untitled-100112காத­லர்­களின் சுவர்க்­க­பு­ரி­யொன்றில் காத­லனைக் கட்டி வைத்து விட்டு காத­லியை மிகக் கொடூ­ர­மான பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய பாட­சாலை மாணவர்கள் உட்­பட ஐவர் அடங்­கிய கோஷ்­டியை கடந்த 7 ஆம் திகதி தெஹி­யத்­த­கண்­டிய நீதிவான் நீதி­மன்ற நீதிவான் சமர விக்­கி­ர­ம­நா­யக முன்­னி­லையில் இடம்­பெற்ற அடை­யாள அணி வகுப்பில் முக்­கிய சந்­தேக நப­ரான 19 வயது இளை­ஞ­ரி­ட­மி­ருந்து கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டதை அடுத்து சந்­தேக நபர் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து தப்பிச் சென்­றதால் தெஹி­யத்­த­கண்­டிய நகரம் பர­ப­ரப்­புக்­குள்­ளா­னது.

பின்னர் தெஹி­யத்­த­கண்­டிய பொலிஸார் பதுளை சிறைச்­சாலை அதி­கா­ரிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து நடத்­திய தேடுதல் வேட்­டையில் சந்­தேக நபர் மீண்டும் கைது செய்­யப்­பட்டு நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டார்.

இம்­முறை க.பொ.த. சாதா­ரண தரப்­ப­ரீட்­சையில் தோற்­ற­வுள்ள 16, 17, 18 வய­தான மாண­வர்கள் மூவர் கடத்தல், கடத்­த­லுக்கு உதவி புரிந்­தமை ஆகிய குற்­றங்­க­ளுக்­காக 10,000 ரூபா சரீரப் பிணையில் விடு­விக்­கப்­பட்­டனர்.

தெஹி­யத்­த­கண்­டிய, திய­வித்­தா­கம, சந்­கிந்த நீர்­வீழ்ச்­சியை அண்­டிய பிர­தேசம் காத­லர்­களின் சுவர்க்­க­பு­ரி­யென அழைக்­கப்­ப­டு­கின்­றது.

கிராந்­துரு கோட்­டேயைச் சேர்ந்த 26 வய­தான காத­ல­னுடன் வந்த 24 வய­தான காதலி திய­வித்­தா­கம ரன்­கிந்த நீழ்­வீழ்ச்­சிக்கு அரு­கி­லுள்ள பற்­றைக்­காட்டுப் பகு­தியில் காதல் மொழி பேசிக்­கொண்­டி­ருந்த போது அங்கு வந்த இந்த ஐந்து இளை­ஞர்­களும் இர­க­சிய பொலிஸார் என தெரி­வித்து இளை­ஞனின் பணப்பை மற்றும் முச்­சக்­கர வண்­டியின் திறப்பை பறித்துக் கொண்டு காத­லனை கட்டி வைத்து விட்டு காத­லியை கடத்திச் சென்று மூன்று இளை­ஞர்கள் அவரை மிகக் கொடூ­ர­மான முறையில் பாலியல் துஷ்­பி­ர­யோத்­துக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

ஐந்து இளை­ஞர்­களும் காத­லனை தாக்கும் போது மெத­கம பிரதேசத்தில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த நபரிடம் விடயத்தை கூறிய போது அவர் இவ்விருவரையும் காப்பாற்றியுள்ளார். தெஹியத்தகண்டிய பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10 மாதங்களில் வடக்கில் 24 பெண்கள் பலாத்காரம்: பெண்கள் அமைப்பு
Next post 11 வய­தான மாணவி பாலியல் துஷ்பிரயோகம் சந்தேக நபருக்கு விளக்கமறியல்