ஐ.நா மனித உரிமை சபைக்கு பிரித்தானியா, ரஷ்யா, சீனா உட்பட 14 நாடுகள் தெரிவு!!
ஐ.நா. மனித உரிமை சபையில் சீனா, ரஷ்யா, சவூதி அரேபியா, பிரித்தானியா, மாலைதீவு, தென் ஆபிரிக்கா, பிரான்ஸ் உட்பட 14 நாடுகள் புதிதாக தேர்தெடுக்கப்பட்டுள்ளன.
உலக நாடுகளில் எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகின்றதோ? அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தருவதும் இந்த சபையின் கடமையாகும்.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இந்த சபைக்கான புதிய உறுப்பு நாடுகள் தேர்தெடுக்கப்படும்.
அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதியுடன் 14 உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய நாடுகளை உறுப்பினர்களாக்கும் இரகசிய தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அதில் சீனா, ரஷ்யா, சவூதி அரேபியா, பிரித்தானியா, மாலைதீவு, தென் ஆபிரிக்கா, பிரான்ஸ், கியூபா, மெக்ஸிகோ, மொரோக்கோ, நமீபியா, வியட்நாம், அல்ஜீரியா, யூகோஸ்லாவ் குடியரசு என்பன புதிய நாடுகளாக இணைத்துக்கொள்ளப்பட்டன.
மொத்தம் 47 நாடுகளைக் கொண்ட மனித உரிமை சபையில் இலங்கை, இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளன.
சீனா, ரஷ்யா, சவூதி அரேபியா, கியூபா ஆகிய நாடுகள் ஐ.நா. மனித உரிமை சபையில் தெரிவுசெய்யப்பட்டமைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Average Rating