இளைஞன் மீது லொறி வீழ்ந்து மரணம்!!
Read Time:1 Minute, 7 Second
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் – குடாஓயா ஆகில் தோட்டத்தில் கல் உடைக்கும் இடத்தில் இளைஞர் ஒருவர் மீது லொறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் 19 வயதுடைய சானக்க சம்பத் ருவான்புர எனுமிடத்தைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் லொறி ஒன்றை திருத்தவேலை செய்து கொண்டிருக்கும் போது அவ்விடத்தில் இருந்த மற்றுமொறு லொறியின் இயந்திர கோளாறு காரணமாக திருத்தவேலை செய்து கொண்டிருந்த இளைஞர் மீது வீழ்ந்ததிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating