பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட 12 வயது சிறுமி மூன்றாவது தடவையும் இளைஞனுடன் சென்றாள்
Read Time:1 Minute, 16 Second
பெற்றோரை எதிர்த்து இளைஞனொருவனுடன் வீட்டை விட்டுச் சென்ற 12 வயது சிறுமியை நீதிமன்றம் பெற்றோரிடம் ஒப்படைத்த பின்னர் மூன்றாவது முறையாகவும் இளைஞனொருவனுடன் வீட்டை விட்டுச் சென்றுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து அச்சிறுமியை இரட்சண்யசேனையில் ஒப்படைக்கும்படி களுத்துறை நீதிமன்ற நீதிவான் அருண அளுத்கே உத்தரவிட்டார்.
பெற்றோருக்கு இச்சிறுமியை பாதுகாக்க முடியாதெனவும் இச்சிறுமி தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதாக விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதை அடுத்தே இச்சிறுமியை இரட்சண்ய சேனையில் ஒப்படைக்கும்படி நீதிவான் உத்தரவிட்டார்.
Average Rating