13 வய­தான மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது!

Read Time:2 Minute, 52 Second

rape-01613 வய­தான தனது சொந்த மகளைப் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாகச் சொல்­லப்­படும் தந்தை ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­தாக புத்­தளம் பொலிஸார் தெரி­வித்­தனர். புத்­தளம் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கொட்­டுக்­கச்சி எனும் பிர­தே­சத்­தி­லேயே இச்­சம்­பவம் இட­டம்­பெற்­றுள்­ளது.

குறித்த சிறுமி அப்­பி­ர­தேச பாட­சாலை ஒன்றில் 8 ஆம் வகுப்பில் கல்வி பயின்று வரு­கின்ற நிலையில் அவ­ளது தாய் தொழில் பெற்று வெளி­நாட்­டுக்கு சென்­றுள்ளார்.

குறித்த சிறு­மியும், அவ­ளது இரு சகோ­த­ரி­களும் தமது தகப்­பனின் பாது­காப்பில் வளர்ந்து வரு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் கடந்த காலங்­களில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் இச்­சி­றுமி தகப்­ப­னால் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களின் மூலம் தெரி­ய­வந்­தி­ருப்­ப­தாகப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இவ்­வாறு தனது தந்­தை­யினால் பாலியல் வல்­லு­ற­வுக்கு தொடர்ச்­சி­யாக உள்­ளாக்­கப்­ப­டு­வதைப் பொறுத்துக் கொள்ள முடி­யாத நிலையில் குறித்த சிறுமி இது தொடர்பில் தனது பாட்­டி­யிடம் தெரி­வித்­த­தை­ய­டுத்தே பாட்­டி­யினால் இச்­சம்­பவம் தொடர்பில் புத்­தளம் பொலிஸ் நிலை­யத்தில் முறை­யி­டப்­பட்­டுள்­ளது.

இந்த முறைப்­பாட்­டை­ய­டுத்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்த புத்­தளம் பொலிஸார் சந்­தேக நபரைக் கைது செய்­துள்­ளனர். பாதிக்­கப்­பட்ட சிறுமி வைத்­திய பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட போது அச்­சி­றுமி பல தட­வைகள் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டுகின்­றது.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபரை புத்­தளம் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்த நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்ள புத்­தளம் பொலிஸார் சம்­பவம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காணாமற் போனோரின் உறவுகளால் தடுக்கப்பட்ட இரா.சம்பந்தன்
Next post யாழ்ப்பாணத்தில் பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன்! பின் வாசலில் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்!!