தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞன் மீது, பொலிசார் தாக்குதல்
Read Time:1 Minute, 9 Second
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட காத்தான்குடி முதியோர் இல்ல வீதி 19ம் வட்டாரத்தை சேர்ந்த பௌமி எனும் இளைஞனொருவர் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் வந்தற்காக காத்தான்குடி போக்குவரத்துப் பொலிஸார் அவர்மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்குள்ளான குறித்த இளைஞன் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Average Rating