மரணமடைந்த தாய் மீண்டும் உயிருடன் வீடு திரும்பினார்!
மரணமடைந்த தாய் ஒருவருக்கு ஏழாம் நாள் தானம் வழங்கும் போது, மரணமடைந்த தாயம் மீண்டும் உயிருடன் வீடு வந்த சம்பவம் ஒன்று கம்பஹா மாவட்டம் கடவத்தை – ரண்முத்துஹல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 8ம் திகதி அதிகாலை ரண்முத்துகம பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 73 வயதான முதிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பின்னர் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த அவரது சடலத்தை அவரது பிள்ளைகள் என்று கூறிய சிலர் எடுத்துச் சென்றனர்.
சில தினங்களில், ராகம, படுவத்தை பகுதியில் வைத்து அவரது இறுதி கிரிகைகள் இடம்பெற்றன.
அவருக்கான ஏழாம் நாள் தானம் வழங்கும்போது, மரணமடைந்ததாக கூறப்படும் தாய் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார்.
காவற்துறையினர் பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த தாயின் பிள்ளைகள் தமது தாய் என்று கருதி, வேறொரு பெண்ணின் சடலத்துக்கு இறுதி கிரிகையை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
Average Rating