கே.பி.: இதுவரை கோரவில்லை!
Read Time:54 Second
புலிகள் இயக்கத்தின் முன்னாள் வெளிவிவகார பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை விசாரணை செய்வதற்கான கோரிக்கை எதனையும் இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சீ.பி.ஐ இதுவரையில் விடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் உலுகல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
கே.பி.யை விசாரணை செய்வதற்கான அனுமதியை சீ.பி.ஐ. இலங்கை அரசாங்கத்திடம் கோரி இருப்பதாக நேற்று இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating