யாழ். அச்சுவேலிப் பகுதியில் இளம் யுவதியை கடத்த முயன்றவர்கள் மடக்கி பிடிப்பு
Read Time:1 Minute, 15 Second
யாழ். அச்சுவேலிப்பகுதியில் தனிமையில் சென்ற இளம் பெண்ணொருவரை தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கடத்த முற்பட்ட பொழுது, பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கடத்தல் முயற்ச்சி முறியடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அச்சுவேலியைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய இளம் யுவதி தனது உறவினரின் திருமண வைபவத்துக்குச் நடந்து சென்றுள்ளார்.
இதன்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதி, இராசாவின் தோட்டத்து சந்தியில் வைத்து வேனில் வந்த இளைஞர்களால் கடத்த முற்பட்ட போது குறித்த பெண் சத்தமிட்டுள்ளார்.
இதனையடுத்து பெண்ணின் உறவினர்களும் அயலவர்களும் சேர்ந்து அப்பெண்ணை காப்பற்றி வாலிபர் இருவரையும் மடக்கிப் பிடித்துள்ளனர்.
Average Rating