கள்ளக் காதலனால், கருகிய குடும்பம்!!

Read Time:16 Minute, 19 Second

016சிகிச்­சைக்­காக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட ஒரு­வ­ருக்­காக வைத்­தி­யர்­களும், தாதி­யர்­களும் தம்மை மறந்து கண்ணீர் விட்­டார்கள் என்று கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றீர்­களா ? ஆம், இவ்­வா­றான சந்­தர்ப்­பங்கள் நிகழ்­வது மிகவும் அரிது. ஏனென்றால்  தினம் தினம் விபத்­துக்­குள்­ளா­ன­வர்­க­ளையும்   நோயா­ளி­க­ளையும் பார்த்துப் பார்த்து பழக்­கப்­பட்ட அவர்­க­ளுக்கு அவ்­வ­ளவு எளிதில் கண்ணீர் வரு­வ­தில்லை.

இவ்­வாறு, பல்­வேறு வகைப்­பட்­ட­வர்­க­ளுக்கு சிகிச்­சை­ய­ளித்த வைத்­தி­யர்கள் முதல் அதற்கு துணை­யாக இருந்த தாதியர் மற்றும் சிற்­றூ­ழி­யர்கள் வரை அனை­வ­ரையும் கண்ணீர் விடச் செய்த சம்­ப­வ­மொன்று தம்­புள்ளை வைத்தியசா­லையில் இடம்­பெற்­றுள்­ளது.

மூன்று வயது நிரம்­பிய ஒரு குழந்தை எவ்­வாறு துரு துரு­வென ஓடி­யா­டிக்­கொண்டு மழலை மொழி பேசி மகிழ்ச்­சி­யாக இருக்கும் என்­பது உங்­க­ளுக்குத் தெரியும். அப்­ப­டி­யான ஒரு குழந்தை தீக்­கா­யங்­க­ளுக்­குள்­ளாகி பேச முடி­யாமல் வேத­னையால் முனங்­கலிட்ட சம்­ப­வமே தம்­புள்ள வைத்­தி­ய­சா­லையில் பலரின் கண்­களை குள­மாக்­கி­யது.

தில்சான் என்ற மூன்று வயது சிறு­வனே இவ்­வாறு தீக்­கா­யங்­க­ளுக்கு உள்­ளாகி தம்­புள்ளை வைத்­தி­ய­சா­லையின் திடீர் விபத்­துப்­பி­ரிவில் அனு­ம­திக்­கப்­பட்டார். ஆம். தாயின் கள்ளக் காத­லனால் பெற்றோல் வீசி கொளுத்­தப்­பட்டு தீயில் சிக்­குண்டே இச்­சி­றுவன் இந்த நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்ளான்.

கடு­மை­யான  தீக்­கா­யங்­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருந்த சிறு­வ­னுக்கு அவனைச் சுற்றி என்ன நடக்­கி­றது யார்? யார்? இருக்­கி­றார்கள் என்று கூட பார்க்க முடி­ய­வில்லை. அதா­வது அந்த தீயி னால் அவன் கண் பார்­வையை இழந்­துள்­ள­துடன். உடல் முழு­வதும் தீயினால் கருகி அடை­யாளம் காண முடி­யாத அள­வுக்கு மிகவும் மோச­மான நிலையில் காணப்­பட்­டுள்ளான்.

உணவு உட்­கொள்­ளக்­கூட முடி­யாத அச்­சி­று­வ­னுக்கு இறப்பர் குழாய் மூலமே ஆகாரம் கொடுக்­கப்­ப­டு­கி­றது. இவ்­வாறு மிகவும் மோச­மான நிலையில் உள்ள அச்­சி­று­வனை காப்­பாற்­று­வது சற்று கடி­ன­மான விடயம் என்றே வைத்­தி­யர்கள் தெரி­விக்­கின்­றனர்.

வேத­னையில் கிடக்கும் அந்த சிறுவன் சில நேரங்­களில் உடலை அசைக்­கக்­கூட முடி­யாமல் அம்மா… அம்மா என்று தட்டுத் தடு­மாறி பேசும் போது தம்மை அறி­யாமல் கண்­களில் கண்ணீர் கொட்­டு­வ­தாக வைத்­தி­யர்­களும் தாதி­யர்­களும் பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்­ளனர்.

கண்­களை இழந்து வேத­னை­யோடு அம்­மாவை தேடும் தில்­சா­னுக்கு அம்­மாவை அழைத்து வந்து பேச வைக்க முடி­யாத இக்­கட்­டான நிலையில் வைத்தியர்கள் இருந்தார்கள். அதா­வது கடந்த ஒக்­டோபர் 30 ஆம் திகதி தனது இரு குழந்­தை­க­ளையும்  இந்த உல­கத்­தையும் விட்டு சிறுவன் தில்­சானின் தாய் இறுதிப் பயணம் சென்­றுள்ளார்.

சிறுவன் தில்­சானின் தாய் உயி­ரி­ழக்கும் போது அவ­ருக்கு வயது 31 கள்ளக் காத­லனால் தனது தாய் இரு பிள்­ளைகள் சிறியானி என நால்­வரும் தீ மூட்­டப்­பட்­ட­தாக உயி­ரி­ழப்­ப­தற்கு முன் சிறு­வனின் தாயான சிறி­யாணி தெரி­வித்­துள்ளார்.

சிறி­யா­ணியின்  தாயும்  மற்­று­மொரு பிள்­ளையும் தீக்­கா­யங்­க­ளுடன்  சிகிச்சை பெற்று வரும் அதே­வேளை மூன்று வயது சிறு­வ­னான தில்சான் உயி­ருக்கு போரா­டிக்­கொண்­டி­ருக்­கிறான். தில்­சானின் சகோ­தரி உதேஷி அவ­ளுக்கு வயது எட்டு. அவளின் முகம் தவிர்ந்த ஏனைய  உடற் பகு­திகள் கடு­மை­யாக தீக்­கா­யங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்­ளன. அவ­ளையும்  காப்­பாற்­று­வது கடினம் என்றே வைத்­தி­யர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அதே­வேளை உயி­ரி­ழந்த சிறி­யா­ணியின் தாயும் தீக்­கா­யங்­க­ளுக்­குள்­ளாகி சிகிச்சை பெற்று வரு­கிறார். அவரின் நிலை­மையும் மோச­மா­கவே உள்­ளது. இந்த சம்­ப­வத்தை நேரில் பார்த்த கலே­வெல பிர­தே­சத்தைச் சேர்ந்த சிறி­யா­ணியின் வீட்டிற்கு அருகில் உள்ள பெண்­மணி கரு­ணா­வதி என்­பவர் பொலி­ஸிற்கு வழங்­கிய வாக்கு மூலத்தின் படி அன்று அக்­டோபர் 20 ஆம் திகதி அப்­போது நேரம் அதி­காலை ஒரு மணி­யையும் தாண்­டி­யி­ருந்­தது.

சிறி­யா­ணியின் வீட்­டிற்குள் கூச்­ச­லிடும் சத்தம் கேட்­டது. அப்­ப­டியே படுக்கை விரிப்பை எடுத்து மேலில் போர்த்திக் கொண்டு சிறி­யா­ணியின் வீட்டுப் பக்கம் சென்றேன். அப்­போது வீட்­டிற்குள் தீச்­சு­வாலை காணப்­பட்­ட­துடன் அங்­கி­ருந்து பவுல் (சிறி­யா­ணியின் கள்ளக் காதலன்) ஓடு­வதை கண்டேன்.

மெல்ல ஜன்னல் வழி­யாக பார்த்­த­போது வீட்­டிற்­குள்ளே எங்கும் தீ பர­வி­யி­ருந்­தது. அப்­போது ஐயோ.. என்னை காப்­பாற்­றுங்­களே ஐயோ…. என்னை காப்­பாற்­றுங்­களே என்று சிறி­யாணி சத்­த­மிட்டார் உடனே நானும் சத்­த­மிட்டு அயலில் உள்­ள­வர்­களை அவ்­வி­டத்­துக்கு வர­வ­ழைத்தேன்.

அதன் பின்­னரே நால்­வரும் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­டார்கள் » என்று அந்த பெண்­மணி வாக்கு மூலம் வழங்­கி­யுள்ளார்.

சிறி­யா­ணியின் கணவர் சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் வேறொரு பெண்ணை திரு­மணம் முடித்­துள்ளார். அப்­போது சிறி­யா­ணிக்கு இரண்டு பிள்­ளைகள் இருந்­தார்கள். ஆகையால் இரண்டு பிள்­ளைகள் மற்றும் வய­தான தனது தாயுடன் இருந்த சிறி­யாணி தனது வாழ்வை கொண்டு நடத்த முடி­யாத இக்­கட்­டான நிலைக்குத் தள்­ளப்­பட்டார். இவ்­வா­றான நிலையில் தனது குடும்­பத்தை காப்­பாற்­று­வ­தற்­காக தம்­புள்ள நக­ரி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் வேலைக்குச் சேர்ந்தாள் சிறி­யாணி.


சாதா­ரண உணவு பரி­மாறும் பணி­யி­லேயே அவர் நிறுத்­தப்­பட்டார். அந்த சந்­தர்ப்­பத்­தி­லேயே பவு­லுக்கும் சிறி­யா­ணிக்கும் இடையில் பழக்கம் ஏற்­பட்­டுள்­ளது. அதன் பின்னர் இரு­வரும் திரு­மணம் முடிக்­கா­ம­லேயே ஒரே வீட்டில் தங்கி குடும்பம் நடத்­தி­யுள்­ளனர். இவ்­வாறு சில மாதங்கள் ஒன்­றா­யி­ருந்த நிலை­யி­லேயே இந்த கொடூரச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

சிறி­யா­ணியும் பவுலும் ஒன்­றாக இருந்த போதும் அடிக்­கடி சண்­டை­யிட்டுக் கொள்­வ­தா­கவும் சில சம­யங்­களில் பக்­கத்து வீடு­களில் சென்று கண­வனின் அடி தாங்க முடி­யாமல் சிறி­யாணி மறைந்து கொள்­வ­தா­கவும் அய­ல­வர்கள் பொலிஸில் தெரி­வித்­துள்­ளனர். எனவே சிறி­யாணி தனது கள்ளக் காத­ல­னி­ட­மி­ருந்து பிரிந்து வாழ முயன்­றி­ருக்­கலாம் எனவும் அத­னா­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றி­ருக்­கலாம் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த மாதம் இரு­பதாம் திகதி இந்த சம்­பவம் இடம்­பெற்ற போதும் ஒன்­பது நாட்கள் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த நிலை­யி­லேயே பத்­தா­வது நாளான கடந்த 30ஆம் திகதி சிறி­யாணி உயி­ரி­ழந்­துள்ளார். எனவே அவர் சிகிச்சை பெற்று வந்த போது பொலி­ஸா­ரிடம் தனக்கு நிகழ்ந்­த­வற்றை வாக்கு மூலத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

அத­ன­டிப்­ப­டையில் தனது கள்ளக் காத­லனே தம் மீது பெற்றோல் ஊற்றி மண்­ணெண்ணெய் விளக்கை தம் மீது வீசி­ய­தாக முறைப்­பாட்டில் பதி­வா­கி­யுள்­ளது.

இவ்­வாறு சிறி­யாணி வழங்­கி­யி­ருந்த வாக்கு மூலத்தின் பிர­காரம் கடந்த முப்­பதாம் திகதி தம்­புள்ளை மணிக்­கூட்டுக் கோபு­ரத்­துக்கு அருகில் வைத்து கலே­வெல பொலிஸார் சந்­தேக நப­ரான பவுலை கைது செய்­துள்­ளனர். கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர் தான் சிறி­யா­ணியை தீ வைத்து கொளுத்­த­வில்­லை­யெ­னவும் அவரே தனக்குத் தானே தீ வைத்து கொண்­ட­தா­கவும் கூறி­யுள்ளார்.

ஆனால், கிரா­ம­வா­சி­யொ­ரு­வரின் வாக்கு மூலத்தின் பிர­காரம் அன்­றைய தினம் காலை அவர் சிறி­யா­ணியின் வீட்­டி­லி­ருந்து ஓடி­யுள்ளார். அத்­தோடு காட்­டுப்­ப­கு­தியில் சென்று தலை­ம­றை­வா­கி­யி­ருந்­துள்ளார். எனவே எதற்­காக அவர் ஓடி ஒளிய வேண்டும் என்ற சந்­தேகம் பொலி­ஸா­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது.

அதே­வேளை, சிறி­யாணி தனக்குத் தானே தீமூட்டிக் கொள்­வ­தானால் தனது  மூன்று வயது மகன் உட்­பட  மகள் மற்றும் தாய் போன்­றோரை தீயிட்டுக் கொளுத்­து­வ­தற்­கான தேவை என்ன என்ற கேள்­வியும் எழுகின்றது.

இவ்­வா­றான நிலையில் விசா­ர­ணை­களை நடத்­திய பொலிஸார் சந்­தேக நப­ரான பவுல் பெற்றோல் கொள்­வ­னவு செய்­தமை தொடர்­பான தக­வல்­க­ளையும் திரட்­டி­யுள்­ளனர். எனவே இவற்­றை­யெல்லாம் வைத்துப் பார்க்­கின்ற போது சிறி­யாணி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்­டி­ருக்க வாய்ப்­பில்­லை­யென்றே பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

அதே­வேளை தீக்­கா­யங்­க­ளுக்­குள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வந்்த போது சிறி­யாணி பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்கு மூலம் மற்றும் அய­ல­வர்கள் வழங்­கிய வாக்கு மூலங்கள் போன்­றன சந்­தேக நபரே இந்த கொடூரச் செயலை புரிந்­துள்­ள­தாக எடுத்துக் காட்­டு­கின்­றன.

இவ்­வா­றான பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தியில் வாழ்ந்து வந்த சிறி­யாணி பவு­லிடம் இருந்து விலக எத்­த­னித்­ததால் இந்த சம்­பவம் இடம்­பெற்­றி­ருக்­கலாம் என்றே பொலிஸார் சந்­தேகம் தெரி­விக்­கின்­றனர்.

அதே­வேளை சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நப­ருக்கு எக்­கா­ரணம் கொண்டும் பிணை வழங்­கக்­கூ­டாது என கிரா­ம­வா­சிகள் ஒரு­மித்த குரலில் தெரி­வித்­துள்­ளனர். அத்­தோடு சந்­தேக நபர் அடிக்­கடி சிறி­யா­ணியை தாக்­கி­ய­தா­கவும் அதனால் அயல் வீடு­களில் அவர் பல சமயம் தஞ்சம் புகுந்­த­தா­கவும் கிரா­ம­வா­சிகள் குறிப்­பி­டு­கின்­றனர்.

எது எப்­ப­டியோ வயது வந்­த­வர்­களின் சில தவ­றான முடி­வு­களால் எந்த பாவமும் அறி­யாத, வாழ வேண்­டிய சின்னஞ் சிறு­சுகள் இன்று மர­ணத்­துக்கும் வாழ்­வுக்கும் மத்­தியில் போராடிக் கொண்­டி­ருப்­ப­துடன் அநாதைகளாக்கப்பட்டுள்ளார்கள்.

பெற்றோர் தமது பிள்­ளை­க­ளுக்­கா­கவும் அவர்கள் தம் எதிர்­கா­லத்­துக்­கா­கவும் தம்மை வருத்தி மெழு­கு­வர்த்­தி­க­ளாக தாம் உருகி பிள்­ளைகள் வாழ்வில் ஒளி­யேற்­று­வதை நாம் பார்த்­தி­ருக்­கின்றோம். அதே­வேளை பிள்­ளைகள் மீது அள­வற்ற அன்பு வைத்­தி­ருந்தும் கூட தமது சில தவ­றான முடி­வு­களால் முழுக் குடும்­பத்தின் எதிர்­காலம் சூன்­ய­மாகி விடு­வதை போன்ற இவ்வாறான சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

எனவே, திருமணமாகி தாம் பெற்றோர்கள் என்ற அந்தஸ்தை பெற்றதும் எப்பொழுதும் தீர ஆராய்ந்து நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். கூடுமானவரை கணவன் மனைவி இருவரும் கலந்து ஆலோசனை செய்து முடிவுகளை எடுப்பது நன்று.

தம்மிடையே சண்டைகள் சச்சரவுகள் ஏற்படுகின்ற போது எந்த பாவமும் அறியாத தமது பிள்ளைகளை பற்றியும் அவர்கள் தம் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விசேடமாக கொலையோ தற்கொலையே எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாகப் போவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கலேவெல பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாத்தளை பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் பர்ணாந்துவின் ஆலோசனைக்கமைய கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எம்.நேசமணி –

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐந்தறிவு ஜீவனான நாய்க்குட்டியின் சகோதர பாசம்! (படங்கள் இணைப்பு)
Next post என் புருஷன் இந்த பூமியிலேயே இருக்கக் கூடாது.. போட்டுத் தள்ளிரு.. ‘பலே’ கள்ளக்காதல் மனைவி!