நுகேகொடயில் விபச்சார விடுதி முற்றுகை மூவர் கைது
Read Time:1 Minute, 21 Second
மிரிஹான பொலிஸ் பிரிவில் பாகொட வீதி நுகேகொட பகுதியில் தங்குமிடம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
வலான குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது குறித்த விபச்சார விடுதியை இயக்கிச் சென்ற ஒருவரும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்களுக்கு வயது 21, 23 ஆகும்.
17ம் திகதி கைது இரவு செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் நேற்று (18) கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதன்போது விபச்சார விடுதியை இயக்கிச் சென்ற சந்தேகநபர் 50,000 ரூபா சரீரப் பிணையிலும் இரு பெண்களும் 2000 சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கு எதிர்வரும் 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
Average Rating