அசாத் சாலியின் தங்கையை கைது செய்ய உத்தரவு
Read Time:1 Minute, 6 Second
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினருமா அசாத் சாலியின் தங்கையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
தனது சகோதரர், கொழும்பு மாநகரசபையின் பிரதி மேயர் எனவும் அவர் மூலமாக பதவி உயர்வைப் பெற்றுத் தருவதாக சுகாதார அமைச்சின் ஊழியர் ஒருவரிடமிருந்து கடந்த 2010ஆம் ஆண்டில் 6 இலட்சம் ரூபாவினைப் பெற்றுக்கொண்டார் என அசாத் சாலியின் சகோதரிக்கு எதிராக நீதிமன்றில் பொலிஸார் குற்றச்சாட்டை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating