நித்திரையில் இருந்த, தம்பதி மீது வாள்வெட்டு

Read Time:1 Minute, 24 Second

knife-arival(1)அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் வாள்வெட்டுக்கு இலக்கான இருவர் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள்வெட்டுக்கு இலக்கான இருவரும் கணவன் – மனைவி என தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் நிந்தவூர் மீராநகர் பிரதேசத்தில் உள்ள வீட்டினுள் புகுந்து கணவன்-மனைவி மீது வாள்வெட்டு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 11.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் தாக்குதல் நடத்தியவர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிந்தவூரில் அண்மையில் ஏற்பட்ட பதற்ற நிலையின் பின்னணியின் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாராளுமன்ற ரணிலின் அலுவலகத்தில் நச்சுப் பாம்பு
Next post மாவீரர் நினைவு வாரம் இன்று முதல் ஆரம்பம்