இணையத்தள ஆபாச படங்களால் விபரீதம்: பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 10 வயது சிறுவன்
இணையத்தள ஆபாச படங்களால் கவரப்பட்ட 10 வயது சிறுவன் ஒருவன் 7 வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
தனது கணினியில் இணையத்தள ஆபாசப் படங்களை பல மணி நேரமாக கண்டு களிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த இந்த சிறுவன் இரு வருடங்களாக அந்த சிறுமியை திரும்பத் திரும்ப பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்துள்ளான்.
மேற்படி சிறுவன் ஆபாச படங்களை பார்ப்பதை அவதானித்தும் அவனது தாயார் அவனை தடுக்காதிருந்துள்ளார். அத்துடன் தாய் பாலியலுறவில் ஈடுபடுவதையும் சிறுவன் பல தடவைகள் காண நேர்ந்துள்ளது.
இந்நிலையில் சிறுவன் தான் குறிப்பிட்ட சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளான்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த வட வேல்ஸிலுள்ள மோல்ட் கிறவுண் நீதிமன்ற நீதிபதி மேற்படி சிறுவன் சிறுவயதில் உள ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளமையே அவனது குற்றச் செயலுக்கு காரணமென தெரிவித்து அவனை விடுதலை செய்ததுடன் அவனை மூன்று வருட காலத்தை சிறுவர் புனர்வாழ்வு நிலையத்தில் கழிக்க உத்தரவிட்டுள்ளார்.
Average Rating