கணவரது சடலத்திற்கு அருகில் ஒரு வருட காலம் உறங்கிய பெண்

Read Time:1 Minute, 51 Second

dead-005தனது அன்­புக்­கு­ரிய கணவர் இறந்­ததால் பெரிதும் துய­ர­டைந்த பெண்­ணொ­ருவர், கண­வ­ரது சட­லத்தின் அருகில் ஒரு வருட காலம் படுத்து உறங்­கிய நெஞ்சை நெகி­ழ­வைக்கும் சம்­பவம் பெல்­ஜி­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

பிர­ஸல்ஸை சேர்ந்த மேற்­படி பெயர் வெளி­யி­டப்­ப­டாத பெண்ணின் (69 வயது) கண­வ­ரான மார்சல் எச் (79 வயது) கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆஸ்­துமா நோயால் பாதிக்­கப்­பட்டு உயி­ரி­ழந்தார்.

இந்­நி­லையில் தனது கண­வரின் மர­ணத்தை தாங்கிக் கொள்ள முடி­யாத மனைவி, கண­வரின் சட­லத்தை நல்­ல­டக்கம் செய்­யாது படுக்­கையில் வைத்­தி­ருந்து, அதி­லி­ருந்து வீசிய துர்­நாற்­றத்­தையும் பொருட்­ப­டுத்­தாது அத­ன­ருகே உறங்கி வந்­துள்ளார்.

மேற்­படி தம்­ப­தி­யினர் தாம் குடி­யி­ருந்த வாடகை வீட்­டுக்கு கடந்த ஆண்­டி­லி­ருந்து வாட­கையை செலுத்­தா­ததால் சின­ம­டைந்த வீட்டு உரி­மை­யாளர் பொலிஸில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து குறிப்­பிட்ட வீட்­டிற்கு பொலிஸார் வந்­த­போதே அங்கு மார்சல் எச்சின் சடலம் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

வெப்­ப­மான கால­நிலை கார­ண­மாக மார்சல் எச்சின் சடலம் உலர்ந்து காணப்பட்டது. அதேசமயம் அவரது உள் உறுப்புகளும் அழுகி உலர்ந்திருந்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இணையத்தள ஆபாச படங்களால் விபரீதம்: பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட 10 வயது சிறுவன்
Next post புலிகளுக்கு ஆதரவு வழங்குபவர்கள் தண்டிக்கப்படுவர் -கோடாபய