பாடசாலை கட்டடத்தில் தூக்கிட்டு தற்கொலை
Read Time:45 Second
பலாங்கொடை, குருபெவிலாகம மகா வித்தியாலய கட்டடத்தொகுதி ஒன்றிலிருந்து நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பாடசாலை கட்டடத்தொகுதியினுள் அந்நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குருபெவிலாகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நபரது சடலம் இன்று காலை பலாங்கொடை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் இராணுவத்தில் கடமையாற்றியவர் என தெரியவந்துள்ளது.
Average Rating