சிறுவன் மோட்டார் சைக்கிள் செலுத்தியதில், பிறிதொரு சிறுவன் உயிரிழப்பு
பதுளையில் சிறுவன் ஒருவன் செலுத்திய மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மற்றுமொரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் பதுளை பொலிஸ் பிரிவின் கிரிந்தவில் இருந்து வத்கும்புற வரையான பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் பின்னால் இருந்து சென்றவரும் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற 10 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளார். சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
இதேவேளை மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இவர் 14 வயதுடைய சிறுவன் என ஆரம்பகட்ட விசாரணகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating