சிறுவன் மோட்டார் சைக்கிள் செலுத்தியதில், பிறிதொரு சிறுவன் உயிரிழப்பு

Read Time:1 Minute, 34 Second

accsidentபதுளையில் சிறுவன் ஒருவன் செலுத்திய மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மற்றுமொரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் பதுளை பொலிஸ் பிரிவின் கிரிந்தவில் இருந்து வத்கும்புற வரையான பாதையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் பின்னால் இருந்து சென்றவரும் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து சென்ற 10 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளார். சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

இதேவேளை மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இவர் 14 வயதுடைய சிறுவன் என ஆரம்பகட்ட விசாரணகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ருதியை தாக்கியவர் கைது: சகோதரருக்கு வேலை கேட்டு வந்ததாக வாக்குமூலம்
Next post கூரையை பிய்த்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்து, பசுமாடுகள் ஏற்படுத்திய பரபரப்பு