கூரையை பிய்த்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்து, பசுமாடுகள் ஏற்படுத்திய பரபரப்பு
வீட்டின் கூரையை பிய்த்துக் கொண்டு 2 பசுமாடுகள் விழுந்து இத்தாலி நாட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின.
சூயி மாஷால் என்ற நெசவாளி தனது வீட்டுத்தறியில் நெசவு செய்து விட்டு, பின்னர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது கூரைப்பகுதி திடீரென்று பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. அவர் ஓடிச்சென்று பார்க்க ஒரு பசுமாடு நின்று கொண்டிருந்தது.
நல்லவேளையாக தறிக்கு எந்த சேதமும் இல்லை. எனவே மாட்டை அவர் வெளியே விரட்டினார். திரும்ப வீட்டிற்குள் நுழைந்த போது மற்றொரு பசுமாடும் விழுந்தது.
ஆனால் இந்த சம்பவத்தில் 2 மாட்டிற்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. வீட்டு உரிமையாளரையும் தாக்கவில்லை.
பக்கத்தில் இருக்கும் காட்டில் மேய்ந்து கொண்டிருந்த அவை ஒன்றை ஒன்று துரத்தலின் போது வந்து வீட்டை பதம்பார்த்திருக்கின்றன.
எனவே வீட்டை சுற்றி வேலி அமைக்க அவர் விரும்பினார். அவருக்கு பணவசதி இல்லாததால் அக்கம், பக்கத்தவர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளனர்.
Average Rating