சாத்தானிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல்களால் பீதியடைந்த தாய்
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு சாத்தானிடமிருந்து தொலைபேசி மற்றும் குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) வந்த திகிலூட்டும் சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
கொலரடா மாநிலத்தில் வசிக்கும் ஜென் வெஸ்ட் என்ற தாயொருக்கே இவ்வறானதொரு அனுபவம் ஏற்பட்டுள்ளது.
ஜென் வெஸ்ட் தனது குழந்தைக்கு அரைத் தூக்கத்தில் இரவில் தாய்ப்பாலூட்டிக்கொண்டிருக்கும் போதே இவ்வழைப்பு 11 666 666 0666 எனும் தொலைபேசி இலக்கத்திலிருந்து வந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வழைப்பைத் தொடர்ந்து ‘சாத்தான்’ எனும் ஒரு சொல் மட்டுமே 48 தடவைகள் குறுந்தவகல்களாக வந்துள்ளது. பின்னர் குறித்த இலக்கத்துக்கு திருப்பி அழைப்பு விடுத்தபோது இவ்விலக்கம் பாவனையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனால் அச்சமடைந்த ஜென் தூக்கம் கலைந்து இரவு முழுவதும் விழித்திருந்ததுடன் தவறாக எதுவும் நடந்துவிடக்கூடாது என இறைவனைப் பிரார்த்திக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இவ்வாறான தொலைபேசி அழைப்பு மற்றும் குறுந்தகவல்களுடன் தொடர்பான சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன.
குறித்த ஒரு தினத்தில் நீங்கள் மரணமடைவீர்கள் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இது மிகவும் அச்சமானதொரு நிகழ்வாக இருக்கும் என பலரும் தங்களது அனுபவங்களை இணையத்தில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
Average Rating