தாயின் இரண்டாவது கணவனால் சிறுவன் அடித்துக் கொலை
Read Time:1 Minute, 5 Second
தாயின் இரண்டாவது கணவனால் அடித்து காயப்படுத்தப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றரைவயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
யாழ். அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பிரிசில் டிலக்சன் என்னும் ஒன்றரைவயதுச் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சிறுவன் மீது தாக்குதல் மேற்கொள்ளும் போது சந்தேக நபர் மதுபோதையிலிருந்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating