மதவாச்சி குளக்கரையிலிருந்து பெண் சடலமாக மீட்பு
Read Time:1 Minute, 9 Second
வவுனியா மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் காணாமல் போன பெண் ஒருவர் குளக்கரையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் தங்கையால் இந்த சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதவாச்சி, பூனாவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான சகுந்தலா பத்மினி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24ஆம் திகதி தொடக்கம் குறித்த பெண் காணாமற்போன நிலையில் நேற்று மாலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Average Rating