சீனா: 2 கப்பல்கள் கடலில் மூழ்கியதில் 3 பேர் பலி – 25 பேர் மாயம்
Read Time:52 Second
சீனாவின் ஷண்டாங் மாகாணத்தின் கடற்பகுதியில் 2 கப்பல்கள் மூழ்கிய விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.
பயணிகள் கப்பல் ஒன்றும் சரக்கு கப்பல் ஒன்றும் நேற்று இரவு 9 மணி மற்றும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பலத்த காற்றினால் ஏற்பட்ட பேரலைகளில் சிக்கி கடலில் மூழ்கியது.
இந்த விபத்துகளில் பலியான மூவரின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கி காணாமல் போன 25 பேரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என ஷண்டாங் மாகாண கடலோர காவல் படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Average Rating