நாய்க்குட்டியை பையில் அடைத்த எஜமானிக்கு சிக்கல்
மேலைநாடுகளில் வசிப்போர் நாய்க்குட்டிகளை தங்களது செல்லப்பிள்ளை போல வளர்க்கிறார்கள். அதற்கு பெரும் தொகையை செலவிடுகிறார்கள்.
ஆனாலும் சில நேரங்களில் இவற்றினால் சிக்கலில் மாட்டி தவிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகிறது.
அந்த வகையில் விலங்கை கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ பகுதியில் வசிக்கும் மேரி ஸ்நெல் (44) என்ற பெண், அவருடைய மகன் பிரிட்டன் ஆங்கல் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் அப்படி என்ன கொடுமையை செய்தனர் என்றால், பிறந்த 8 வாரமேயான நாய்க்குட்டியை பிளாஸ்டிக் பையில் அடைத்துவைத்தார்கள் என்பதேயாகும்.
இது சமூக வளைத்தளத்தில் (‘பேஸ்புக்’) வெளியாக அதை பார்த்த ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டார். இதுபற்றி மேரி கூறுகையில், ‘இது மிகச்சிறிய குட்டியாக இருந்ததால் பையில் போட்டு எடுத்துச்சென்றேன்.
பிறகு எப்படி? கொண்டு செல்வது?. நிரந்தரமாக அதை அடைத்து வைக்கவில்லையே’ என கேள்வி விடுக்கிறார்.
Average Rating