மதுபோதையில் வந்து மனைவி, பிள்ளைகளை துன்புறுத்தியவருக்கு விசித்திரமான தண்டனை
மதுபோதையில் தனது மனைவி, குழந்தைகளை துன்புறுத்தும் கணவனுக்கு குருநாகல் நீதிமன்றத்தில் நேற்று விசித்திரமான ஒரு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நபர் மதுபோதையில் வீடு வந்து குடும்ப அங்கத்தவர்களை துன்புறுத்துவதாக வீரப்புகெதர பொலிஸார்இ குருநாகல் நீதிமன்ற நீதிவான் ரவீந்திர பிரேமரட்னவிடம் முறைப்பாடு செய்தனர்.
முறைப்பாட்டை விசாரித்த நீதவான், குறித்த நபருக்கு தண்டனை வழங்கியோ அல்லது சிறைக்கு அனுப்பியோ திருத்த முடியாது. சம்பந்தப்பட்டவரது துன்புறுத்தலைத் தடுக்க ஒரே வழி சம்பந்தப்பட்டவரை பொலீஸில் தடுத்து வைப்பதாகும்.
எனவே தினமும் மாலை 5 மணியிலிருந்து 8.30 மணிவரை வீரப்புகெதர பொலிஸ் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட்டு அங்கு தங்கியிருந்து பின்னர் வீடு செல்ல முடியும் என நீதவான் தெரிவித்தார்.
அத்துடன் சந்தேகநபருக்கு 2500 ரூபா பிணை வழங்கியதுடன் மேற்படி உத்தரவு மீறப்படின் கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்ட கால இடைவெளி வரை இவ்வாறு நடத்தை அவதானிக்கப்பட்டு பின்னர் மீள் பரிசீலிக்கும்படும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Average Rating