ஸ்ரீதரன் எம்.பி.யின் அறிக்கையிலிருந்து, த.தே.கூ. எட்டங் கட்டியுள்ளது!

Read Time:2 Minute, 13 Second

tna.sritharanபுலிகளையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் போற்றிப் புகழ்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனினால் நாடாளுமன்றத்தில் விடுக்கப்பட்ட அறிக்கையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எட்டங்கட்டியுள்ளது.

இது கட்சியின் நிலைப்பாடு அல்லவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் டெய்லிமிரருக்கு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் அறிக்கை பற்றி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்டபோது, 21ஆம் திகதி செப்டெம்பர் மாதம் நடந்த மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக கட்சி வெளியிட்ட விஞ்ஞாபனத்தில் தேசியப் பிரச்சினை தொடர்பான கட்சியின் நிலைப்பாடு தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளதென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

‘பிரபாகரனின் பிறந்ததினமான நவம்பர் மாதம் 26 இல் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் உணர்ச்சி வசப்பட்டிருக்கலாம். அவர் ஓர் உணர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்;. நாம் இந்தப் பாணியில் எமது தேர்தல் பிரசாரத்தை செய்யவில்லை.

ஸ்ரீதரன் கூட இவ்வகையில் பிரசாரம் செய்யவில்லை. எமக்கு முன்னரே தெரிந்திருந்தால் நாம் இதை அனுமதித்திருக்க மாட்டோம்’ என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

‘இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல. நாம் இதில் தெளிவாக உள்ளோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாவீரர் தினம்: முல்லைத்தீவு பிள்ளையார் கோவில் ஐயர் கைது
Next post (VIDEO) மதயானைக் கூட்டம் – ட்ரெய்லர்…