வேலைக்குச் சென்று கொண்டிருந்த, பெண்ணின் பின்புறத்தைக் கிள்ளிச் சென்ற நபர்
Read Time:1 Minute, 30 Second
கடமைக்காக சென்று கொண்டிருந்த திருமணமான பெண்ணொருவரின் பின்புறத்தைக் கிள்ளி பாலியல் ரீதியில் துன்புறத்தியது தொடர்பாக மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான இளம் பெண்ணொருவரே முறைப்பாட்டாளராவார். ஒருநாள் காலை கடமைக்குச் செல்வதற்காக இப்பெண் மஹரகம வீதி வழியே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த நபரொருவர் இப்பெண்ணின் பின்புறத்தை கிள்ளிவிட்டுச் சென்றதாகவும், இப்பெண் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை குறித்துக் கொண்டு மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது அது தலவத்துகொடயிலுள்ள பாதுகாப்பு நிறுவனமொன்றுக்கு சொந்தமானதென தெரியவந்துள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating