மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதி அதிபருக்கு விளக்கமறியல்
Read Time:58 Second
அனுராதபுர தலாவ பகுதிலுள்ள பாடசாலையொன்றின் 10 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதி அதிபர் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரான பிரதி அதிபர் இன்று தம்புத்தேகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி பகுதிநேர வகுப்புககளுக்கான பாடசாலைக்கு சென்ற சந்தர்ப்பங்களில் பிரதி அதிபர் சுமார் ஒரு வருடகாலம் அவ்வப்போது அவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளனர்.
Average Rating