நடிகை சுருதிஹாசனை தாக்கியவர் ஜாமீனில் விடுதலை
Read Time:1 Minute, 16 Second
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் நடிகை சுருதிஹாசன் மும்பை பாந்திரா கடற்கரையோர பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6–வது மாடியில் வசித்து வருகிறார்.
கடந்த 19–ந்தேதி அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அவரை வீட்டு வாசலில் தாக்க முயன்றார். அந்த நபரை வேகமாக தள்ளிவிட்டு கதவை உள்புறமாக சுருதிஹாசன் பூட்டிக்கொண்டார்.
பாந்திரா போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து தாராவியை சேர்ந்த அசோக் சந்தர் திரிமுக்கே என்பவரை கைது செய்தனர்.
3 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த அசோக் சந்தர் திருமூக்கே ஜாமீன் கோரி பாந்திரா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனு மீது விசாரணை நடத்தி ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Average Rating