நெடுந்தீவு EPDP பிரதேசசபைத் தலைவர் கொலை: ஒருவர் கைது

Read Time:1 Minute, 33 Second

arrest-017நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெஷிசன் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நெடுந்தீவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினருமான டானியல் றெஷிசின் கடந்த 26 ஆம் திகதி புதன்கிழமை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

பிடரிப் பகுதியில் காயமிருந்தமையினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பொழுது, அவரது தலையிலிருந்து துப்பாக்கி ரவை ஒன்று மீட்கப்பட்டது.

தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பிரதேச சபைத் தலைவர் இறப்பதற்கு முன்னர் பயணம் செய்த ஆட்டோவில் இருந்த நபர் தொடர்பில் விசாரணையினை முடக்கி விட்டிருந்தனர்.

இந்நிலையில், நெடுந்தீவினைச் சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லொறியின் சில்லுக்குள் சிக்கி ஒன்றரை வயது ஆண் குழந்தை மரணம்
Next post மாவீரர் தின அனுஸ்டிப்பு: தமிழக முகாமில் எழுவர் கைது 33 பேர் உண்ணாவிரதம்