சிறுமி காணாமற் போன சம்பவம்; சந்தேகநபர் கைது
திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவில் 3 வருடங்களுக்கு முன்னதாக 13 வயது சிறுமி காணாமற்போன சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் மினுவாங்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகா திவுல்வௌ இரண்டாம் பிரிவைச் சேர்ந்த குறித்த சிறுமி காணாமற்போன சந்தர்பத்தில் அதே இடத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரும் தலைமறைவாகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமற்போன சிறுமி பின்னர் தமது உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இதற்காக பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி சந்தேகநபருடையது என கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த மொறவௌ பொலிஸார் மினுவங்கொடையில் சந்தேகநபரை கைது செய்யதுள்ளனர்.
எவ்வாறாயினும் காணாமற்போன சிறுமி தொடர்பான தகவல்களை சந்தேகநபர் இதுவரை வெளியிடவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொறவௌ பொலிஸார் சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Average Rating